Tuesday, July 13, 2010

குளிக்க மறுக்கும் குட்டிகள்!!

குளிப்பது எல்லோருக்கும் பிடித்த விசயமா? இங்கே பாருங்கள் இந்த குட்டிகளின் குளியல் ஆட்ட்த்தை!!!

1.அய்யய்யோ!!! காப்பாத்துங்க!!

2.புசு புசுன்னு இருந்த என்னை இப்படி ஆக்கிட்டானுங்க!!

3.என்னைய விடுங்க!!! அப்புறம் குளிக்கிறேன்!!

விட மாட்டேங்கிறீங்களே!

4.நான் கலையில் தான் குளித்தேன் என்றால் நம்புங்கப்பா!!

5.கையெடுத்துக் கும்பிடுறேன்!! அந்தத் தொகுதியில் நான் நிக்கலை!! என்னைய விட்டுடுங்க!!!

6.எனக்கே குளியலா? வர மாட்டேன்!!

7.எப்படி நடுங்குது பாருங்க எனக்கு!!!

8.இப்படி கொடுமை பண்றாங்களே! யாராவது காப்பாத்துங்க என்னை!! ப்ளூகிராஸைக் கூப்பிடுங்கள்!!

என்ன நான் அனுப்பியிருக்கும் படங்களை உங்க குழந்தைகளிடம் காட்டலாம்!!! குளியல் வேலை ஈஸியா முடியும் பாருங்க!!!

முகம் தெரியா தோழிகள் .........!!!

முகம் தெரியாத முல்லைகள்..
முகவரி இல்லா நட்புடன்...

கண்கள் சந்ததில்லை என்றாலும்
இதயங்கள் இதமாய் பேசியதுண்டு.....

எழுதுகோலில் தொடங்கிய நம் நட்பின்
ஆழத்திற்கு அளவுகோல் இல்லை......

அன்பால் அரவணைக்கும் உள்ளங்கள்..
கண்ணீர் துயர் துடைக்கும் கைகள்.....
தன்னம்பிக்கை தரும் தாரகைகள்....
துன்பங்களை இறக்கி வைக்க சுமைதாங்கிகள்...
எல்லாம் இங்கு உண்டு...

எழுத்துகளில் ஆரம்பித்து இதயத்தில்..
சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும்..
இந்த நட்பிற்கு...
இணையேதும்மில்லை......

அன்பென்றால் காதலா..?



முகஸ்துதிக்கு முறுவலித்தால்
முழம் போட்டு பின் தொடர்ந்து
முழுவதுமாய் அளந்து
முழுதாய் விலை பேசி
முகவரி கேட்கின்றாய்
புன்னகைக்கு விலையேது? பெண்ணை
புண் நகை செய்யாதே!

அன்பைக் கொட்டிப் பேசினால் காதலை
அள்ளி விடும் கண்ணன்களே!
‘அங்கே’ அவளுக்கு நீங்கள் அல்லவா?
பெண்கள் இதயமெல்லாம்
உனக்குள் என்று தொடத்துடிக்கும்
நீங்கள் கண்ணா!

இளமையை ஏன்?
விலையாக்கின்றீர்கள்
‘அவளுக்கு’ ஒருவனாய் வாழ்ந்தால்
அது சுகம்
ஆயிரத்தில் ஒன்றாக ஆசை வைக்காதீர்
பேச்சுக்கள் மட்டும் பெரிதல்ல...
பெண்மை என்பதெல்லாம்
உனக்கு மட்டுமா?
கன்னிகளின் உள்ளங்களை
காயப்படுத்தாதீர்.

காதல் வந்தால்...!!!

காதல் வந்தால்...!!!

வாழ்க்கை இனிக்கும்
வசந்தம் வரும்
கவிதை வரும்...
பசிமறப்பாய்
தூக்கம் தொலைப்பாய்
தனிமையில் பேசுவாய்
தனியாய் சிரிப்பாய்
உனக்குள்ளே உரைநடை
நிகழ்த்துவாய்
கற்பனைகள் ஊற்றெடுக்கும்
கவிதைகள் தேன்சுரக்கும்!

அப்போதுதான் - நீ
தமிழை நேசிப்பாய்
பழைய வார்த்தைகளைத்
தேடிப்பிடித்து அர்த்தங்களை
அகராதியில் தேடுவாய்
காதல் கவிதைகள்
கற்கண்டாய் இனிக்கும்

நீ
காதலிப்பவருக்கே தெரியாமல்
அவள் ஆடைகளை
வாசம் பார்ப்பாய்
கந்தலோ... கிழிந்தலோ...
கையில் கிடைத்தால்
கண்காட்சி பொருளாய்
பத்திரப்படுத்துவாய்...

இது-
காதலா...காமமா...
உனக்குள்ளே கேள்விகள் எழும்
ஒருவழியில் சமாதானமாவாய்!