Monday, June 28, 2010

மழை போல தான் நீயும்...............!!!

நீ என்னை நேசிக்கவே
யோசிக்கிறாய்.......
நான் உன்னை சுவாசிக்கவே
யாசிக்கிறேன்...


உன்னை கண்டுபிடித்தேன்.......
என்னை தொலைத்து.....
உயிர் உறையும் குளிரிலும்
உன் இதழ் தரும் வெப்பம் போதும்......


கண்ணை மூடும் போது
மட்டும் இல்லை
கண்ணை திறந்திருக்கும் போதும்
நீ மட்டும் தான்
எதிரினில் தெரிகிறாய்....


நினைவில் தீயாய் நீ
உருகுகிறேன் நான் மெழுகாய்.....
கடலுக்குள் கலக்கும்
சூரியனைப்போல்
உனக்குள் கலந்திட ஆசை.........


மற்றவர்கள்
பதிக்கத்தான்
முயல்வார்கள்....
ஆனல் நீயோ
புதைத்து விட்டாய்
என்னுள் உன்னை.....

காதல் என்னவென்று
உன் கண்களை காணும் வரை
தெரியவிலை
உன் கண்களை கண்ட பிறகு
வேறெதுவும் தெரியவிலை!

கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன்
கைகள் தானாய் கிறுக்கியது
என்னவளின் பெயரை....


நீ தந்த
நினைவுகள்
மறப்பதில்லை
இறப்பதுவுமில்லை....
நாளைதான் நீ வருவாய்
நாளை எப்போது வரும்?????


காதல் வழியும் கண்களை
சிதைக்கும் புன்னகையை
உயிர் தொடும் விரல்களை
தூக்கம் பறிக்கும் குரலை
நிலை தடுமாற வைக்கும்
எல்லாம் மறந்து விடுகிறேன்


என்னை மட்டும்
திருப்பித்தந்து விடு
நான் நானாக இல்லை....


உனக்கும் எனக்குமான
இடைவெளியில் இருப்பது
வேறொன்றும் இல்லை
நம் நெருக்கத்தை தவிர....


தேவையான
பல விடயங்களை
மறந்து போகிறேன் நான்
உனது நினைவுகளை தவிர...


கனவுகள் உயிரோட்டமாய்
உணர்வுகள் உயிரோவியமாய்
இதயத்தில் இதமான நினைவுகளாய்


என்றென்றும் என்னவள்
நீ வந்து போன
தடமெல்லாம்அழிச்சிடத்தான்
நெனச்சிருந்தேன்...
நீ வந்த தடமிருக்கு...
போன தடமில்லையே...


இன்னும் என்உசுருக்கள்ளே இருக்கியோ
இப்படியேஎன் உசுர எடுப்பியோ......
என்னருகே நீயிருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
கரைகின்றேன் உனக்குள்ளே
அன்பே நீ அறிவாயா


என்னுயிரும் உரைக்கிறதே
உன் விரல்கள் தொடுகையிலே
உன் மூச்சில் நான் வாழ
என்னுள்ளே ஸ்வாசிப்பாயா
சுதந்திரம் வேண்டும் எனக்கும்......
சிறைகொள்ளவா - உன் கைகளுக்குள்......


மழை போல தான் நீயும்
சில நேரம் தவிக்க விடுகிறாய்
சில நேரம் மூழ்கடிக்கிறாய்

மழை போல தான் நீயும்
சில நேரம் குடை பிடித்தாலும்
நனைத்து விட்டு போகிறாய்

மழை போல தான் நீயும்
சில சமயம் தீ தேட வைக்கிறாய்

மழை போல தான் நீயும்
மிடறுகளில் முடிவதில்லை
உன் மேலான தாகம்

மழை வரும்போதெல்லாம்
உன் ஞாபகம் போல
உன் ஞாபகத்தில் எல்லாம்
மழை பொழிகிறது
பாதி நேரம் உன்னை
மறக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
மீதி நேரத்தில்
உன்னை மறக்க முடியாமல்................

ரோஜாவும் நீயும்..!!!

துடிதுடிக்கிறேன்





உன் நினைவுகளில்....!





நீ இல்லா நேரங்களில்....!





ரோஜாவும் நீயும்..!!!

உன் குற்றமா..? என் குற்றமா..??

சொல்லிச் செல்...!!!





கருகிய காதல்...!!





நீ அறிந்ததில்லை...!!!




உன் குற்றமா..? என் குற்றமா..??




ஏனோ.. நீ..!!

ஸ்ரீ ராம ஜெயம்.

அர்த்தம் என்ன...?

அணைத்துப் பேசிய உன்
அருகாமைகளின் அர்த்தம் என்ன?


மோகத்தில் நீ கொடுத்த
முத்தங்களின் மொழி என்ன?


ஏக்கத்துடன் நீ பார்த்த
பார்வைகளின் பொருள் என்ன?


காதலில் நீ கொடுத்த
கனவுகளின் கதி என்ன?


காதல் தேர்வில்
விடையேதும் தெரியா மாணவன் நான்..


சொல்லிவிட்டுப் போயேன்
கைவிட்டுச் சென்ற காரணத்தையாவது..

என்னவளே...!

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும்
உனது சொற்கள் எனது
நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை
சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்