Shortcut Keys | Description |
WINKEY | Pressing the Windows key alone will open Start. |
WINKEY + F1 | Opens the Microsoft Windows help and support center. |
WINKEY + F3 | Opens the Advanced find window in Microsoft Outlook. |
WINKEY + D | Brings the desktop to the top of all other windows. |
WINKEY + M | Minimizes all windows. |
WINKEY + SHIFT + M | Undo the minimize done by WINKEY + M and WINKEY + D. |
WINKEY + E | Open Microsoft Explorer. |
WINKEY + Tab | Cycle through open programs through the taskbar. |
WINKEY + F | Display the Windows Search / Find feature. |
WINKEY + CTRL + F | Display the search for computers window. |
WINKEY + F1 | Display the Microsoft Windows help. |
WINKEY + R | Open the run window. |
WINKEY + Pause / Break key | Open the system properties window. |
WINKEY + U | Open Utility Manager. |
WINKEY + L | Lock the computer (Windows XP and above only). |
WINKEY + P | Quickly change between monitor display types. (Windows 7 only) |
WINKEY + LEFT ARROW | Shrinks the window to 1/2 screen on the left side for side by side viewing. (Windows 7 only) |
WINKEY + RIGHT ARROW | Shrinks the window to 1/2 screen on the right side for side by side viewing. (Windows 7 only) |
WINKEY + UP ARROW | When in the side by side viewing mode, this shortcut takes the screen back to full size. (Windows 7 only) |
WINKEY + DOWN ARROW | Minimizes the screen. Also, when in the side by side viewing mode, this shortcut takes the screen back to a minimized size. (Windows 7 only) |
Tuesday, June 15, 2010
Microsoft Windows shortcut keys
அவளால் சுமாரான கவிதைகள்...!!
எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்படி?
***
உனக்கான உடைகளை
அளவெடுத்து தைக்கிறாயா?
அழகெடுத்து தைக்கிறாயா?
***
சந்தித்த கணத்தில்
கட்டித்தழுவுகின்றன!
காதலர்கள்…
நாமா? நம் உதடுகளா?
***
மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா…
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?
***
அம்மா பெயர் என்னவென்று கேட்டால்
“அம்மா” என்றே சொல்லுகிற குழந்தையைப்போல
உன்னை ஏன் பிடித்திருக்கிறதெனக் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிறது
என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
***
அச்சடித்துக் கொடுத்த இந்த ஐந்தையுமே
‘சுமாராத்தான் இருக்கு’ என்றெழுதி
திருப்பிக்கொடுத்து விட்டாள்!
மீண்டும் வாசித்துப் பார்த்தேன்.
அச்சடித்த எழுத்துக்கள்
எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்!
அக்னி நிலா!
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
“சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?
யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன…
செல்பேசிகள் இரண்டும்!
“எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…
ம்ம்ம்…எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?
கோபம்…
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!
என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!
காதல் கவிதைகள்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
முத்தம்....
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
எதிர் வீடு காலியான +2 விடுமுறையில்
இதயத்துக்குள் குடி புகுந்தது ஒரு கனவு:
“இரண்டிலும் ஒரு தேவதை குடிவருவாளா?”
உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!
பழகிய ஒரே வாரத்தில்
என் வீட்டு சமையலறை வரை வருகிறாய்!
எப்போதும் உன்வீட்டு வாசல்படி தாண்டியதில்லை நான்!
என் அம்மாவிடம் கதையளக்கிறாய்…
என் அப்பாவிடம் பேசுகிறாய்…
என் தங்கையிடம் விளையாடுகிறாய்…
என்னை மட்டும் பார்க்கிறாய்!
அடுத்த வாரமே கலந்தாய்வு*க்கு ஒன்றாய்ப் பயணிக்கிறோம் !
மறு வாரமே ஒரே கல்லூரியில் சேர்கிறோம்!!
ஒருமுறை தானே இயற்கை வரம் தரும்…
வாரா வாராம் தருமா என்ன?
அந்த ஒருமாதமும்
கோடை விடுமுறையல்ல…
கொடை விடுமுறை!
என் வீட்டில் எல்லோரிடமும் பேசுகிற நீ!
உன் வீட்டில் யாரிடமும் பேசாத நான்!
நம்முடன் பேசியும் பேசாமலும் நாம்!
முதலாமாண்டு எதிர்வீட்டுப்பெண்ணாய்…
இரண்டாமாண்டு கல்லூரித்தோழியாய்…
மூன்றாமாண்டு நலம்விரும்பியாய்…
என் இதயவாசல்கள் ஒவ்வொன்றாய்த் திறந்து உள்நுழைகிறாய்!
மூன்றாண்டுகளாக…
எதையெல்லாமோப் பேசி தீர்த்த நாம்
இறுதியாண்டு முழுதும் காதலைப் பற்றியே பேசியதன்
காரணம் அப்போது தெரியவில்லை!
காதலைப் பற்றிய உன் எண்ணங்களை
முழுதாய் அறிந்து கொண்டபோதும்
உன்னை மனைவியாக அடையப் போகிறவன்
கொடுத்து வைத்தவன் என்றே
நினைத்துக் கொண்டது என் மனது!
பின்னொரு நாள்
என் கவிதைகளை வாசித்து விட்டு
என்னைக் கணவனாய் அடையப் போகிறவள்
கொடுத்து வைத்தவள் என்று நீ சொல்ல
மெல்லிய சலனம் எனக்குள்!
அதன்பிறகு
என் மீது நீ அக்கறை கொள்ளும்
ஒவ்வொரு நிகழ்விலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து கொண்டிருந்தது
உன் மீது நான் கொண்டிருப்பது
நட்புதான் என்ற என் நம்பிக்கை!
எப்போது, எப்படி, எதனால்
என்கிற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லாமல்
நம் நட்புக்குள்ளே
சத்தமில்லாமல் மெதுவாய்
நுழைந்து கொண்டிருந்தது
என் காதல்!
ஒருநாள் பழைய நண்பனிடம்
உன்னை அறிமுகப் படுத்துகையில்
உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்”
உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”
மின்சாரம் இல்லாத அந்தப் பௌர்ணமி இரவில்
மொட்டை மாடியில் கூடியிருக்கிறது குடும்பம்…
என்னிடம் தனியாக கேட்கிறாய்…
“ஒரு கவிதை சொல்லு”
“எதைப் பற்றி?”
“ம்ம்ம்… என்னைப் பற்றி?”
“சுடிதாரிலும் வருகிறாய்…
தாவணியிலும் வருகிறாய்…
நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”
“ம்ம்ம்… காதல் கவிதை!”
மின்சாரம் வந்தது!
நீ மறைந்து போனாய்…
எனக்கேத் தெரியாமல் நானுன்னைக் காதலிக்க…
உனக்கேத் தெரியாமல் நீயென்னைக் காதலிக்க…
காதலுக்கு மட்டுந்தான் தெரிந்திருக்கும்,
அப்போது நாம் காதலித்தது!
அடுத்துவந்த நாட்களில்
வார்த்தைகளைத் தாண்டி
பார்வைகள் பேசிக்கொண்டதை
வார்த்தையில் வடிக்க முடியுமா?
எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள்,
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!
பேசுவதே பாதிதான்…அதிலும் பாதியை
பார்வையில் சொல்லிவிட்டுப் போனால்
எப்படிப் புரியும்?
பன்மொழி வித்தகனாக யாராலும் முடியும்!
பெ(க)ண்மொழி வித்தகனாக யாரால் முடியும்?
காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!
நம் காதலை நாம் உணர்ந்தபிறகும்
யார் முதலில் சொல்வதென நம்மிடையேப் போட்டி!
நடுவராய் இருக்கிறது நம் காதல்!
பெண்கள் காதலைச் சொல்லும்போது
வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்…
ஆண்கள் காதலைச் சொல்லும்போது
பயம் வந்து கொல்லுமாம்…
உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க…
என் தைரியத்தை நீ பரிசோதிக்க…
தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!
வென்றாய் நீ!
சொல்லிவிடத் துணிந்து விட்டேன் நான்!
எப்படி? எப்படி?? எப்படி???
“சொல்லுவது எளிது, சொன்னதை செய்வது கடினம்!” **
காமத்துப்பால் எழுதிய வள்ளுவனா இப்படி சொன்னது?
காதல் மட்டும் இங்கே முரண்படுகிறது!
அதே மொட்டை மாடி…
மாலை நேரம்…
நீ…நான்…தனிமை…
“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”
“சொல்லு”
“நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”
“கேளு”
“அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”
திக்..
திக்..
திக்..
“ம்ம்ம்… இது எனக்கு முன்னாடியேத் தெரியுண்டா லூசு!”
சொல்லிவிட்டு வெட்கப் பட்டாய் நீ!
தோற்கவில்லை நான்!
“காதலுக்குப் பரிசெல்லாம் இல்லையா?”
“என்ன வேணும்?”
“ஒரு முத்தம்”
சிரித்துக் கொண்டே என் உள்ளங்கை எடுக்கிறாய்…
“நீ
உதட்டில் கொடுப்பது
மட்டும் தானடி முத்தம்…
மற்றதெல்லாம் வெறும் சத்தம்!”
சொல்லிவிட்டு, புன்னகையோடு நான் பார்க்க ,
“நீ ரொம்பப் பேசற.. உனக்குக் கையிலக் கூடக் கிடையாது.. இந்தா இப்படியே வாங்கிக்க” என்று சொல்லி
“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து ஊதி விட்டாய்…
காற்றிலெல்லாம் கலந்துபோனது,
உன் காதல் வாசம்!”
“என்னிடம் காதல் வாங்கினால்
முத்தம் இலவசம்” என்றாய்…
“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…
தனக்கொரு க(வி)தை
இலவசமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில்
நம்மையேப் பார்த்துக் கொண்டிருந்தது…
நம் காதல்!
உனக்காகவே வாழ்கிறேன்..!!
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
************************************
அன்று
கருப் பதிவு..!
Mummy!
Sorry! Sorry!! அம்மா,
நான் தான் delivery ஆகப்போற உன் child பேசுறேன்.
சே! நீ computer டப்பாவை தட்ற வேலை பார்த்தாலும் பாக்கிற, இப்பவே எனக்கு English கலந்து தான் பேசவருது.
அப்பறம், எனக்கு A, B, C லே ஆரம்பிக்கிற பேர் எல்லாம் வச்சுடாதே,
நல்லா M, N... S இதுல ஆரம்பிக்கிற மாதிரி பேர் வை.
பரீச்சை எழுதும்போது alphabetical order-லே எனக்கு முன்னாடியும் பின்னாடியும் யாராவது இருப்பாங்க
அப்பதான் நான் discuss பண்ணி எழுத முடியும்.
அப்பா, government-ல வேலை பார்க்கிறாறா இல்லை private-லயா?
வீட்டு வாடகை 6000, 7000 இருக்குன்னு கேள்விபட்டேன்,
அதனால இப்பவே அப்பாவ ஒரு வீடு வாங்க சொல்லிடு,
ஒரு 2000 சதுர அடியில.
ம்ம்ம்.. மறந்துட்டேன், ஒரு காரும் வாங்க சொல்லு.
Hyundai Santro போதும்.
இப்ப இருக்கிற டிராபிக்கை பார்த்த என்னை கூட்டிட்டு பஸ்லே எல்லாம் போக முடியாது.
அதுவில்லாம call taxiக்கு பணம் குடுத்து மாளாது.
நான் விளையாட்றதுக்கு பெரிய பொம்மையெல்லாம் வேணும்.
என்னவிட பெரிசா இருக்குமே, அந்த கரடி பொம்மை ஒரு நாலு வாங்கணும்.
toys-க்கு கூட VAT போட்டாங்களாமே!
கொஞ்ச அதிகமாகவே பணத்த சேத்து வச்சுக்கோங்க!
என்னது! LKG சேக்கிறதுக்கு 50,000 செலவாகுமா?
அடப்பாவிங்களா! அப்ப 2000 சம்பளம் வாங்கிறவங்க குழந்தை எப்படி தாண்டா படிக்கும்?
இப்படியே போன கையளவு கூட படிக்கமுடியாது போல,
அப்பறம் எங்கே கடலளவு படிக்கிறது!!?
என்னை தமிழ் medium சேக்கபோறீயா இல்ல English medium சேக்க போறீயா?
இப்பவே தமிழ் படத்துக்கு தமிழ்ல தான் பேர் வைக்கனும்ன்னு சொல்றாங்க!
நான் படிக்க வர்றதுக்குள்ள English medium எல்லாம் இருக்குமான்னு தெரியல?
எதுக்கும் இதெல்லாம் கேட்டு வச்சுக்கோ!
உனக்கு yahoo.com-ல account இருக்கா இல்ல yahoo.co.in-ல account இருக்கா?
நீ ஒண்ணு பண்ணு, இப்பவே எனக்காக ஒரு account create பண்ணி வச்சுடு,
அப்பறம் கிடைக்குமோ கிடைக்காதோ!
gmail.com கூட நல்லா இருக்குன்னு கேள்விபட்டேன், அப்படியா??
கடைசியா ஒரு விஷயம்!
நான் உனக்கு முதல் பிள்ளைன்னா என்னை நீ பெத்துக்கோ!
இல்ல எனக்கு அண்ணாவோ அக்காவோ இருக்காங்கன்னா
என்னை கலச்சுட்டு ஒரு அனாதை பிள்ளையை தத்தெடுத்துக்கோ!!!
காதலி கோபம் ..!!
என் முத்தவிசைக்கு எதிர் விசை எங்கே என்றால்
போடா என்று வெட்கக் கோபத்துடன் ஓடுகிறாய்
நகை அணிந்து வந்து அழகாய் இருக்கிறேனா என்று கேட்டாய்
நகை அழகாய் இருக்கிறது என்றேன்
பொய்க் கோபத்துடன் முறைக்கிறாய்
நான் சொன்னது உன்னால் அந்த நகை அழகாகிவிட்டது என்று
கோபப்படுவது அழகல்ல என்றாலும்
நீ கோபப்படும் போது அழகாயிருக்கிறாயே
உன் செல்லக் கோபத்திற்க்காக
தினம் தவறாமல் தவறு செய்யகிறேன்
நில்.. நிதானி… காதலி...!!!
காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையவே கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை.
உன்னைச் சந்தித்தபின்.
நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.
ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை.
நிமிட நேரம் தான்
உன்னைப் பார்த்தேன்
இப்போது
நிமிட நேரமும் விடாமல்
நினைத்துத் தொலைக்கிறேன்.
.
பூவா தலையா
கேட்கிறாய்
நீ.
காசு
என்கிறேன் நான்.
.
அழகானதை சொல்
எனும் போது
ஏன் தான் உன்னை
நினைத்துத் தொலைக்கிறேனோ ?
உன்னை
நினைத்தபின்
எப்போது தான்
சொற்கள் வந்திருக்கின்றன ?
.
உனக்குப் பிடிக்காததை
செய்யும் போது
உனக்குப் பிடிக்காதே என்றும்,
உனக்குப் பிடித்ததைச்
செய்யும் போது
உனக்கும் பிடிக்குமே என்றும்,
எஞ்சியவற்றை
செய்யும் போது
உனக்குப் பிடிக்குமோ என்றும்….
நீ சார்ந்த எண்ணங்கள் மட்டுமே
நீள்கின்றன.
இது
உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ?
.
ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.
.
நீ
வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
நீ
அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்.
.
எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.
.
உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.
.
உங்களைப் போல
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா
என்ன அழகான கவிதை !!!