Monday, June 14, 2010

நான் எதுவும் செய்ய முடியாது நிக்கிறேன்
நிழல் இல்லாத வெம்மை மணலில் கால்கள் புதைந்ததால்.

***********

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

***********

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
உறவாக இல்லை என் உயிராக...!!

***********

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்.
அதில் சிலருடைய காதலோ
மனதில் ஆரம்பித்து மணவறையில் முடிகின்றது
எனினும் சிலரது காதல்
கண்களில் ஆரம்பித்து கண்ணீரில் முடிகின்றது.
இதில் எனது காதல் எப்படியோ?

***********

உன் விழிகள் என்னை காணத்துடித்தால்
உன் இமைகளை மெதுவாக மூடு
உன் இதயம் துடிக்கும் தூரத்தில் நான் வந்து இருப்பேன்

***********

ஒவ்வொரு இரவிலும்
ஒரு புல்லாங் குழல்
காற்றில் கசிந்து கசிந்து காதில் விழுகிறது.
சொல்லத் தெரியாத சோகங்களை
அது அள்ளிச் செல்கின்றது.

***********

காதல்:-
அலைகள் தீண்ட காத்திருக்கும் கரைகள் போல..
வண்டுகள் தீண்ட காத்திருக்கும் மலர்கள் போல...
மேகங்கள் தீண்ட காத்திருக்கும் நிலவு போல...
உன் கண்கள் தீண்டும் வரை காத்திருக்கும் என் காதல்.

***********

காதலின் வயது அது..
எத்தனை கோடி அத்தனை காலம் நாம் வாழலாம் வா..!!
நீ ஒற்றை நிமிடம் உன்னை பிரிந்தால் உயிரும் வற்றி போகும்...!!!
பாதி நிமிடம் வாழ்ந்தால் கூட கோடி வருஷம் ஆகும்...!!!

கவிதை உபயம் - கலைமதி திலகநாதன்-

என் இதயத்தில் - நீ

உனக்கும் எனக்கும்
இடையில் உள்ள வெளியில்
பெரிய இடைவெளி உள்ளது
அதனை காதலிட்டு நிரப்பிக்கொண்டு இருக்கிறது
நம் இத்தனை நாள் பிரிவு

---------------------------------------

மேகம் கொடுத்த மழை
மண் வாசம் விட்டு செல்லும்...
நீ கொடுத்த காதல் – என் உயிரை
எடுத்துசென்றதா ??? கொடுத்து சென்றதா ??

---------------------------------------

எத்தனை முறைதான்
உன்னால் என் இதயத்தை உடைக்க முடியும் ?..
காதல் உன்னைப்போல அசாதாரணமானது
நீ உடைக்க உடைக்க
அது ஒட்ட வைத்து கொண்டே இருக்கும்….!!

------------------------------------

நான் பார்க்கும் பொருட்கள் எல்லாம் நீயாகத் தெரிகின்றது என் கண்களை மூடினால் நீ மட்டுமே தெரிகின்றாய்.

-------------------------------------

விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன், எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்.

------------------------------------

வாசிக்கும் பழக்கம் இல்லாத என்னை உன் காதல் கடிதங்களுக்கு வாசகி ஆக்கி விட்டாய்.

-------------------------------------

ஒரு நாள் பேசாது விட்டாலே கோபிக்கும் காதல் பல காலம் ஆனாலும் தொடரும் நட்பு..!!

--------------------------------------

என் கவிதைகளின் கண்ணீர் துளிகளில் துளிர் விட்டுக்கொண்டு இருக்கின்றது என்னோடான உன் ஞாபகங்கள்.

----------------------------------------

காற்றில் கலந்து கானம் இசைக்கும் புல்லாங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி ஆனால் உன்னைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே.

---------------------------------------

என் இதயத்தில்- நீ
இனிமைக்கு- நீ
என் இசை வசந்தம்- நீ
காற்று உள்ள வரை- என்
இரவுக்கு துணை- நீ.

---------------------------------------

என் பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களை படித்த நாட்களை விட அதில் உன்னைப் பார்த்த நாட்களே அதிகம்

-----------------------------------------

இந்தக் காம்பில் இந்தப்பூ எப்படி மலர்ந்தது என்று இந்த உலகமே என் கவிதைகளைப் பார்த்து வியக்கின்றது ஆனால் அதற்க்கு தெரியாது என் கவிதைகளுக்கு எல்லாம் விதையாய் இருப்பது நீ என்று...........


கவிதை உபயம் - கலைமதி திலகநாதன்.