Thursday, June 17, 2010

காதல் என்னும் கவிமழை...!!

காதல் என்னும் கவிமழை
கண்ணீரோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...
கண்கள்.....
கண்டது உண்மையா.....?


எனக்கும்
உன் அருகாமை இல்லாத போது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை
...!!!

கவிதை உபயம் - கலைமதி திலகநாதன் -

என் வாழ்க்கைக்கு எதிர்பார்க்கும் தோழி ஆனவள்....!!!

அன்பு காட்டுவதில் தாயாய்.....
கண்டிப்பதில் தகப்பனாய்.....
வழிகாட்டுவதில் ஆசானாய் ....
துணை நிற்பதில் தோழனாய்.....
துயரங்களில் தோழியாய்.....

என் கடந்த காலத்திற்கு செவிகொடுக்கவும்.....
என் நிகழ் காலத்திற்கு மெருகூட்டவும்.....
என் எதிர் கால வாழ்விற்கு உரு கொடுக்கவும்....
என் மன காயங்களிற்கு மருந்திடவும்.....
என்னை புரிந்து கொள்ளவும்....
எனக்காக ஏங்கிடவும்....
என் நலம் காத்திடவும்....

அவளுக்காக வாழ்ந்திடவும்.....
மீதமுள்ள என் வாழ்நாளை அவளுக்காக அர்ப்பணித்திடவும்....

என் வாழ்வு முழுமை அடைந்திடவும்....
எனக்கொரு அன்பான தோழி தேவை.....!
ஏன்... அது நீயாக இருக்கக் கூடாது..???

உன்னை பார்த்த பின்பு.......!

நான் நடந்த சாலைகள்
அந்தி மாலை
மயக்கும் நிலவு
உடனே வந்த உறக்கம்
அதிகாலை சூரியன்
சிரிக்கும் பூக்கள்
பறவையின் ஓசை
பசிக்கும் வயிறு
உதட்டில் புன்னகை
இதயத்தின் துடிப்பு

எல்லாமே புதிதாய்
வியப்பாய்...
மீண்டும்
உன்னை பார்த்த பின்பு.....!

காத்திருப்பேன் உனக்காக ஓவியமே.....!

வண்ணங்களோடு தூரிகை விளையாட...........
எண்ணங்களோடு விரல்கள் நடனமிட.............
கற்பனைகளோடு மனது கரைபுரண்டிட..........
மனது எனும் நகரத்தை அழகுபடுத்திட............

அந்த நகரத்தை ஓவியங்களாக வரைந்திட......
அந்த ஓவியங்களின் கற்பனையாக நீ இருந்திட...
அந்த ஓவியங்கள் நிரந்தரமாக என் மனதில் இருந்திட....
அந்த ஓவியங்களால் என் மனது கண்காட்சியகமாய் மாறிட....

என் கற்பனைகளை நிறைவேற்றிட.....
எப்போது தோன்றுவாய் ஓவியங்களாக .......
என் மனதில் நீ ........!

அது வரை நான் .....!
வண்ணங்களோடும் ......!
தூரிகையோடும்.....!
காத்திருப்பேன் உனக்காக ஓவியமே.....!

உன் மௌன உணர்வுகளால்............!

காதல் மீது நான் முட்டி விட்டேனா..?
இல்லை ....
காதல் என் மீது முட்டி விட்டதா..?
என்னை கொல்லாதே ....
உன் மௌன உணர்வுகளால்....!

இப்போதாவது சொல்லி விட்டு போ...!
உனக்கும் எனக்குமான
இதுவரை சொல்லாத அந்த
மௌன உணர்வுகளை.........!