Saturday, July 17, 2010

Wednesday, July 14, 2010

மலரும் நினைவுகள்...!!!

(பழய சினிமா பாடல்களுடன்)

அலுவலகம் செல்ல பஸ் நிலையத்தில்
காத்து நின்றேன்

கல்லூரி செல்ல தோழியுடன் நீ
அங்கு வந்தாய்

உன் நடையைப் பார்த்து நான்
'ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்' என்று மனதுக்குள் பாடினேன்

தோழியுடன் பேசிய உன் பேச்சைக் கேட்டு
'பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா'
என்று மனதுக்குள் பாடினேன்

கனத்த புத்தகங்களை நீ சுமந்ததைப் பார்த்து
'உங்க பொண்ணான கைகள் புண்ணாகலமா
உதவிக்கு வரலாமா' என்று மனதுக்குள் பாடினேன்

நான் உன்னை ஸைட் அடிப்பதை காண சகிக்காதவர்கள்
பஸ் நிலையத்தில் என்னை முறைத்த போது
'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல்
கூடுமோ' என்று மனதுக்குள் பாடினேன்

திடீரென்று நீ உன் திருமணப் பத்திரிகையை
உன் தோழியிடம் கொடுத்த போது
என் ஒரு தலை ராகத்தில் இடி விழுந்தது
அப்போது 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று
என்று மனதுக்குள் பாடினேன்

அந்த சமயத்தில் நீ போகும் பஸ் வர
என்னை அறியாமல் நானும் ஏறப் போக
'கண் போன போக்கிலே கால் போகலாமா'
என்ற பாட்டு என்னை தடுத்தது

இறுதியாக நான் செல்லும் பஸ் வர
'காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்'
என்று மனதுக்குள் பாடிக்கொண்டு அலுவலகம்
சென்றேன்

Tuesday, July 13, 2010

குளிக்க மறுக்கும் குட்டிகள்!!

குளிப்பது எல்லோருக்கும் பிடித்த விசயமா? இங்கே பாருங்கள் இந்த குட்டிகளின் குளியல் ஆட்ட்த்தை!!!

1.அய்யய்யோ!!! காப்பாத்துங்க!!

2.புசு புசுன்னு இருந்த என்னை இப்படி ஆக்கிட்டானுங்க!!

3.என்னைய விடுங்க!!! அப்புறம் குளிக்கிறேன்!!

விட மாட்டேங்கிறீங்களே!

4.நான் கலையில் தான் குளித்தேன் என்றால் நம்புங்கப்பா!!

5.கையெடுத்துக் கும்பிடுறேன்!! அந்தத் தொகுதியில் நான் நிக்கலை!! என்னைய விட்டுடுங்க!!!

6.எனக்கே குளியலா? வர மாட்டேன்!!

7.எப்படி நடுங்குது பாருங்க எனக்கு!!!

8.இப்படி கொடுமை பண்றாங்களே! யாராவது காப்பாத்துங்க என்னை!! ப்ளூகிராஸைக் கூப்பிடுங்கள்!!

என்ன நான் அனுப்பியிருக்கும் படங்களை உங்க குழந்தைகளிடம் காட்டலாம்!!! குளியல் வேலை ஈஸியா முடியும் பாருங்க!!!

முகம் தெரியா தோழிகள் .........!!!

முகம் தெரியாத முல்லைகள்..
முகவரி இல்லா நட்புடன்...

கண்கள் சந்ததில்லை என்றாலும்
இதயங்கள் இதமாய் பேசியதுண்டு.....

எழுதுகோலில் தொடங்கிய நம் நட்பின்
ஆழத்திற்கு அளவுகோல் இல்லை......

அன்பால் அரவணைக்கும் உள்ளங்கள்..
கண்ணீர் துயர் துடைக்கும் கைகள்.....
தன்னம்பிக்கை தரும் தாரகைகள்....
துன்பங்களை இறக்கி வைக்க சுமைதாங்கிகள்...
எல்லாம் இங்கு உண்டு...

எழுத்துகளில் ஆரம்பித்து இதயத்தில்..
சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும்..
இந்த நட்பிற்கு...
இணையேதும்மில்லை......

அன்பென்றால் காதலா..?



முகஸ்துதிக்கு முறுவலித்தால்
முழம் போட்டு பின் தொடர்ந்து
முழுவதுமாய் அளந்து
முழுதாய் விலை பேசி
முகவரி கேட்கின்றாய்
புன்னகைக்கு விலையேது? பெண்ணை
புண் நகை செய்யாதே!

அன்பைக் கொட்டிப் பேசினால் காதலை
அள்ளி விடும் கண்ணன்களே!
‘அங்கே’ அவளுக்கு நீங்கள் அல்லவா?
பெண்கள் இதயமெல்லாம்
உனக்குள் என்று தொடத்துடிக்கும்
நீங்கள் கண்ணா!

இளமையை ஏன்?
விலையாக்கின்றீர்கள்
‘அவளுக்கு’ ஒருவனாய் வாழ்ந்தால்
அது சுகம்
ஆயிரத்தில் ஒன்றாக ஆசை வைக்காதீர்
பேச்சுக்கள் மட்டும் பெரிதல்ல...
பெண்மை என்பதெல்லாம்
உனக்கு மட்டுமா?
கன்னிகளின் உள்ளங்களை
காயப்படுத்தாதீர்.

காதல் வந்தால்...!!!

காதல் வந்தால்...!!!

வாழ்க்கை இனிக்கும்
வசந்தம் வரும்
கவிதை வரும்...
பசிமறப்பாய்
தூக்கம் தொலைப்பாய்
தனிமையில் பேசுவாய்
தனியாய் சிரிப்பாய்
உனக்குள்ளே உரைநடை
நிகழ்த்துவாய்
கற்பனைகள் ஊற்றெடுக்கும்
கவிதைகள் தேன்சுரக்கும்!

அப்போதுதான் - நீ
தமிழை நேசிப்பாய்
பழைய வார்த்தைகளைத்
தேடிப்பிடித்து அர்த்தங்களை
அகராதியில் தேடுவாய்
காதல் கவிதைகள்
கற்கண்டாய் இனிக்கும்

நீ
காதலிப்பவருக்கே தெரியாமல்
அவள் ஆடைகளை
வாசம் பார்ப்பாய்
கந்தலோ... கிழிந்தலோ...
கையில் கிடைத்தால்
கண்காட்சி பொருளாய்
பத்திரப்படுத்துவாய்...

இது-
காதலா...காமமா...
உனக்குள்ளே கேள்விகள் எழும்
ஒருவழியில் சமாதானமாவாய்!

Monday, July 12, 2010

நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்..!!

புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.

நீயில்லாமல் நான்

நீரில்லாத மீன்.

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.

உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.

ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்

நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,

நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,

அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்

எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,

நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

என் இதயத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.

நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே

திரை விமர்சனம்: "தியான பீட விளையாட்டுப் பிள்ளை”

திரை விமர்சனம்: "தியான பீட விளையாட்டு பிள்ளை"
நடிகர்: புன்னகை தளபதி நித்யானந்தா
நடிகை: ரஞ்சிதா
டைரக்டர்: லெனின்


சன் பிக்சர்சின் தீராத விளையாட்டு பிள்ளை எதிர்பார்த்த அளவு வெற்றி நடை போடாத நிலையில் செவ்வாய் மாலை சன் நியூஸ் ரிலீஸ் செய்திருக்கும் "தியான பீட விளையாட்டு பிள்ளை" வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.

புன்னகை தளபதி 'நித்தி' இதுவரை பார்த்திராத புதிய கோலத்தில் நடித்திருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடித்திருக்கும் கதாநாயகி யார் என சஸ்பென்சாக வைத்திருந்ததும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
வழக்கமாக ஒரு நாளுக்கு நான்கு ஷோ மட்டுமே படங்கள் திரையிடப்படும் நிலையில் இந்த திரைக்காவியம் அரை மணிக்கொரு முறை சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பட்டது அனைத்து ரசிகர்களிடேயும் வரவேற்பு பெற்றது.
குப்பென்று பத்திகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் ரஜினி பிரச்சனை பொசுக்கென்று முடிந்து விட்டது. அடுத்த படம் வேறு வெள்ளி கிழமைதான் வரும். அதுவரை பதிவு போட என்ன செய்வது என பதறி கொண்டிருந்த பதிவுலகிற்கு " நித்தியின் சித்து விளையாட்டு " ஸ்டான்ட் காட்சிகள் பெரும் டாபிக் ஆக அமைந்ததால் எல்லோரும் சேனலுக்கு நன்றி தெரிவித்து யூடூப் லிங்க் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

தங்களது ஆன்மீக குரு இதுவரை எவ்வளவோ தியான முறைகளை சொல்லி தந்துள்ளார். ஆனால் இத்தைகைய புதிய தியான ஆசனங்களை எங்களுக்கு இவ்வளவு நாட்களாய் சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது ஏன் என படத்தை பார்த்த சீடர்கள் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்தனர்.

தங்களது எல்லா படங்களுக்கும் இடைவிடாத விளம்பரம் போடுவது போல இந்த படத்திற்கும் சன் டி.வி.யில் "அடுத்த காட்சி 9 மணிக்கு... 9.30 மணிக்கு... 10 மணிக்கு " என இடைவிடாத ப்ளாஷ் நியூஸ் ஓடிய வண்ணம் இருந்தது குறிப்பிடதக்கது.

அதே போல் ஊர் ஊராய் சென்று படத்தின் ரிசல்ட்டை பாலோ அப் செய்யும் தங்களது பாரம்பரிய முறைப்படி, இந்த படத்திற்கும், திருவண்ணமலையில் ஆசிரமம் முற்றுகை, புதுவையில் படம் எரிப்பு, கடலூரில் பறந்தது செருப்பு என விடாது பாலோ செய்து சூடாக ரிசல்ட் சொன்ன சன் நியூஸ் சேனலின் கடமை உணர்வை தமிழ் குடிமகன்கள் மெய் சிலிர்த்து பாராட்டி புளகாங்கிதம் அடைந்தனர்.

படத்தின் பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. குறைவான நேரமே கொடுக்கப்பட்டாலும் டெர்ரராக இசை அமைத்த இசை அமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

எங்கே படத்தின் காட்சிகள் மக்களுக்கு புரியாமல் போய் விடுமோ என அஞ்சி க்ரியேடிவ் டீம் அமைத்துள்ள வர்ணனை வசனங்கள் அடுத்த வருடத்திற்கான விருது பெரும் சாத்திய கூறுகள் உள்ளது.

படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் இருந்ததால் அதை தாங்களே சென்சார் போர்டாக செயல்பட்டு அனைவரும் பார்க்கும் விதத்தில் U செர்டிபிகேட்டுடன் வெளியிட உதவிய எடிட்டரின் பணி பாராட்டுக்குரியது

"தியான பீட விளையாட்டு பிள்ளை" - சன் பிக்சர்சின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட்

அதிகம் பொய் சொல்வது ஆணா ? பெண்ணா ?

பொய் சொல்லாத மனுஷன் வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது” ன்னு எல்லாரும் அடிச்சுச் சொல்றாங்க. அவங்க அடிக்கிற அடியைப் பாக்கும்போ நமக்கு அரிச்சந்திரன் மேலயே மைல்டா டவுட் வருது. அவரு மட்டும் எப்படி பொய்யே சொல்லாம வாழ்க்கையை ஓட்டியிருக்காரோ ?.

கொஞ்ச நேரம் உக்காந்து யோசிச்சா இந்த டயலாக் உண்மை தாங்கறது நமக்கே புரியும். காலைல எழும்பி , “ஹே.. இன்னிக்கு காபி நல்லா இருக்கு” ன்னு சொல்ற முதல் பொய்ல ஆரம்பிச்சு “அப்பப்பா…. செம டிராபிக் ” ங்கற பொய்யோட லேட்டா வீடு வந்து சேரதுக்குள்ளே எத்தனை பொய் சொல்லியிருப்போம் ? கூட்டிக் கழிச்சுப் பாத்தா சில நேரம் நமக்கே மலைப்பா இருக்கும்.

இந்த பொய்ங்கற சமாச்சாரத்தை ரெண்டு பெரிய பிரிவா பிரிக்கிறாங்க. ஒண்ணு அடுத்தவங்களுக்கு இடஞ்சல் இல்லாத பொய்கள். “வாவ்… சுடிதார் கலக்கலா இருக்குடி? எங்கே வாங்கின ?” ன்னு தோழியிடம் சொல்றதோ, “சார், உங்க ஐடியா சூப்பர்” ன்னு மேனேஜர் கிட்டே சொல்றதோ ஒரு வகை. இதெல்லாம் அடுத்தவங்க மனசு நோகக் கூடாதுன்னு சொல்றதா இருக்கலாம். அல்லது அடுத்தவங்களோட தன்னம்பிக்கையை வளர்க்கிறதுக்காக சொல்றதா இருக்கலாம். எப்படியா இருந்தாலும் இதுல டேஞ்சர் இல்லை. இதை வெள்ளைப் பொய்கள் ன்னு ஆங்கிலத்தில சொல்லுவாங்க.

இன்னொரு வகை பொய் தான் டேஞ்சர். ஒரு பொண்ணு கூட பெசண்ட் நகர் பீச்சில சுண்டல் சாப்பிட்டுட்டு, “ ஆபீஸ்ல ஆடிட், அதான் டார்லிங் லேட்” ன்னு மனைவி கிட்டே சொல்றதோ, இல்லேன்னா “ நான் தம் அடிக்கிறதே இல்லை, சே.. அந்த நாற்றமே எனக்கு உவ்வே..” என்று சொல்றதோ பெரிய பொய்கள் லிஸ்ட்ல வரும்.

எல்லோருக்குமாய் பெய்யும் மழை போல எல்லோருக்குள்ளேயும் கொஞ்சம் பொய் கலந்து தான் இருக்கு. அது இலக்கியத்தில வர செம்புலப் பெயல் நீர் போல கலந்து வரும்போ உண்மையும் பொய்யும் கண்டு பிடிக்க முடியறதில்லை. அதனால “நான் பொய் சொல்ல மாட்டேன்” ன்னு ஒருத்தர் சொன்னா, அதையும் ஒரு பொய்யா அவரோட லிஸ்ட்ல தாராளமா சேத்துக்கலாம்.

அதென்னவோ தெரியல, பெண்கள் தான் அதிகம் பொய் சொல்வாங்கன்னு ஒரு பேச்சை நம்ம ஊரில் ரொம்ப சகஜமா கேக்கலாம். இளச்சவன் தலைல மிளகா அரைக்கிறதுங்கறது இது தான். நம்ம ஊரு தான் காலங் காலமா ஆண்கள் சொல்றதுக்கு “ஆமாம்” போடற ஊராச்சே. அதனால தான் இந்த பழமொழியெல்லாம் இன்னும் கிழ மொழியாகாம வழக்கத்துல இருக்கு.

ஆனா உண்மை என்ன சொல்லுது தெரியுமா ? அதிகமா பொய் சொல்றது ஆண்கள் தானாம். அப்போ பெண்கள் ? அவங்க திறமையா பொய் சொல்லுவாங்களாம் ! அடடா ! இதுல கூட நுணுக்கமான வெற்றி பெண்களுக்குத் தானா ?

பெண்களோட பொய் ஏரியா ஷாப்பிங். இருக்கிற பணத்தையெல்லாம் ரங்கநாதன் தெருவில இறைச்சிட்டு வந்தா கூட, “ஜஸ்ட் 275 ரூபாய்க்கு ஒரு சாரி எடுத்தேன்ங்க, மேட்சிங் பிளவுள் வெறும் 23 ரூபா தான்” ன்னு அவர்கள் சொல்லும் எவரெஸ்ட் அப்படியே நம்பி விடும் அப்பாவி ஆண்கள் ஏராளம். ரொம்ப உஷாரா விலை ஸ்டிக்கரையெல்லாம் ஏழு கடல் ஏழு மலை தாண்டி பூதத்தோட காலடில போட்டு வெச்சுடுவாங்க. என்ன தான் ஊரையே புரட்டினாலும் கண்டு பிடிக்க முடியாது.

“ பொண்ணுங்க தான் அதிகம் பொய் சொல்வாங்க. நாங்க எல்லாம் அப்பாவிங்க. எவ்ளோ பொய் சொல்லி லவ் பண்ணிட்டு கடைசில என்னைத் தாடி வளர்க்க விட்டுட்டா. பொண்ணுன்னாலே பொய் தான் ” என ஆண்களும், “லவ் பண்ணும்போ என்னென்ன சொல்றாங்க ! கண்ணு அழகா இருக்குங்கறாங்க, பேச்சு பாட்டு மாதிரி இருக்குங்கறாங்க, சிரிச்சா கியூட் ன்னு சொல்றாங்க… எல்லாம் பொய், ஆணுன்னாலே பொய் தான்” என பெண்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கிறாங்க.

சரி நீங்க சண்டை போடாதீங்க, யார் ரொம்பப் பொய் சொல்றதுன்னு நான் சொல்றேன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணினாங்க லண்டன்ல. இதுக்கெல்லாமா போய் ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு நீங்க கேக்கக் கூடாது. அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொல்லுதுன்னா, பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியா மூணு பொய் சொல்றாங்களாம். ஆண்களோ ஒரு நாள் ஆறு பொய் சொல்றாங்களாம் ! இந்த ஆராய்ச்சியே பொய் ன்னு ஆண்கள் போராட்டம் நடத்தாதிருப்பார்களாக.

இந்த ஆராய்ச்சில நிறைய சுவாரஸ்யங்கள். ஆண்களும் பெண்களும் பொதுவா சொல்ற பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல, நல்லா தான் இருக்கேன்” என்பது தானாம்.

“ஹே.. உன் உடம்பு இளைச்சுடுச்சு டியர். நீ குண்டாவே தெரியல “, “சாரி, செல்போன்ல சிக்னலே கிடைக்கல”, “அந்த நேரம் பாத்து என் போன் பேட்டரி டவுன் ஆயிடுச்சு”, “ஓ… மிஸ்ட் கால் ரொம்ப லேட்டாதாண்டா பாத்தேன்”, “ ரொம்ப எல்லாம் குடிக்கலம்மா, ஜஸ்ட் ஒரே ஒரு ஸ்மால்”, “ இதோ வந்துட்டே இருக்கேன்”, “ இந்த டிராபிக் படுத்துது… செம கடியா இருக்கு” இதெல்லாம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ? இதெல்லாம் ஆண்கள் சகஜமா சொல்ற பொய்களாம் ! உஷார் ஆயிடுங்க அம்மணிகளே !

அப்போ பெண்களோட பொய்கள் லிஸ்ட் ? அது இல்லாமலா ? “ இது புதுசா வாங்கினதில்லீங்க, பழசு தான்”, “ சே… இது ரொம்ப மலிவா கிடைச்சுது”, “ அது எங்கே இருந்துதுன்னே எனக்குத் தெரியாது, நான் அதை தொடவே இல்லை”, “ இல்லையே, நான் அதை எறியவே இல்லையே”, “சாரி.. உங்க போன் கால் மிஸ் பண்ணிட்டேன்”,” இன்னிக்கு ரொம்ப தலை வலியா இருக்குங்க” இதெல்லாம் பெண்களோட பேவரிட் பொய் லிஸ்ட்டாம் ! ஆண்களே, இது கேட்டுக் கேட்டு பழகின வார்த்தைங்க தானே ?

குறிப்பா இந்த ரொமாண்டிக், லவ் காலத்துல பொய்களெல்லாம் நிறுத்தாம வந்துட்டே இருக்கும். வேணும்னா அனுமர் வால், திரௌபதி சேலை இப்படி ஏதாச்சும் புரண உதாரணத்தை மனசுல நினைச்சுக்கோங்க.

“இன்னிக்கு இந்த டிரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே” என அவன் கடலை போட ஆரம்பிக்கும் நிமிஷத்திலிருந்து “ நீ சிரிக்கும்போ உன் கண்ணும் சேர்ந்தே சிரிக்குது”, “ நீ இல்லேன்னா நான் இல்லே”, “உன்னைத் தவிர ஒரு பெண்ணை நான் நினைச்சுக் கூட பாக்க முடியாது” என சகட்டு மேனிக்கு உடைத்துத் தள்ளுவதில் ஏதோ ஒண்ணிரண்டைத் தவிர எல்லாமே அக்மார்க் பொய்கள் தான். ஆனால் என்ன, அந்தப் பொய் தான் அந்த நிமிஷத்துல காதலிக்கும் தேவை. அப்போ தான் வீட்டுக்குப் போற வழியிலேயே “ ஹே.. ஐ மிஸ் யூ டா”, ” ஐ லவ் யூ சோ சோ சோ சோ மச்” என்றெல்லாம் எஸ் எம் எஸ்ஸித் தள்ள முடியும் !

“பெண்கள் அன்பின் வெளிப்பாடாய் செக்ஸை அனுமதிப்பார்கள், ஆண்களோ செக்ஸுக்காக அன்பை வெளிப்படுத்துவார்கள்” என்பார் ஜேம்ஸ் டாப்சன் எனும் எழுத்தாளர். கிட்டத் தட்ட அது உண்மை என்பதை ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

ஹெல்த் அண்ட் சயின்ஸ் அட்வைசரி குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பல இருட்டுப் பொய்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற சங்கதி போல, பெண்களுடன் உறவு கொள்வதற்காக எக்கச் சக்க பொய் சொல்லியிருக்கிறோம் என ஒத்துக் கொண்ட ஆண்கள் 47 சதவீதமாம் ! அப்பாடா, எல்லா ஆண்களும் பொய் சொல்லல. என் வீட்டுக் காரர் இந்த லிஸ்ட்ல வரமாட்டார் என வீட்டம்மாக்கள் மனசைத் திடப்படுத்திக் கொள்ளலாம். ஆனா பெண்களில் இது 10 சதவீதம் தானாம் !

கல்லூரி மாணவர்கள் இந்த விஷயத்துல எப்படி என ஒரு ஆராய்ச்சி நடத்தியது வாஷிங்டன் ஸ்டேட் அமைப்பு. அங்கேயும் ஆண்கள் தான் முன்னணி. 22 சதவீதம் பேர் சக மாணவிகளை பொய் ஐஸ் மழை பொழிந்து “அந்த” விஷயத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

“அந்த” ஏரியா பொய்களெல்லாம், “போன மாசம் தான் ஹெல்த் செக்கப் பண்னினேன், எனக்கு எயிட்ஸ் மாதிரி நோயெல்லாம் இல்லை”,” நான் கருத்தடை ஆபரேஷன் பண்ணியிருக்கேன்”, “ உன்னைத் தவிர வேறொருத்தியை நான் நெனைக்கவே மாட்டேன்”,” இதான் பஸ்ட் டைம்”, ” ஐ லவ் யூ சோ மச்”, “ இது லாங் லைஃப் பந்தம்”, “ இந்த டைம்ல கர்ப்பம் எல்லாம் ஆகவே ஆகாது… ஐ பிராமிஸ்” என சில்மிச மசாலா பொய்கள் ! இந்த ஏரியாவில் நடந்த பொய்களோட டீட்டெயில்ஸ் எல்லாம் கொஞ்சம் அசைவ வாசனைங்கறதனால இதோட நிறுத்திக்கறேன்.

ஏற்கனவே சொன்னது மாதிரி, பெண்களோட மெயின் பொய் ஏரியா ஷாப்பிங் தான். 75 சதவீதம் பெண்கள் எவ்ளோ பணம் செலவழிச்சோம்ங்கற உண்மையை சொல்லவே மாட்டாங்களாம். 60 சதவீதம் பெண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துலயாவது புருஷனை ஏமாத்தறாங்களாம். வெளிநாடுகள்ல பெண்கள் சொல்லும் பொய்ல கொடுமையான பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, குழந்தைகளும் இல்லை” ங்கறது தானாம். வீட்ல குழந்தைங்க இருக்கிற அம்மாக்கள் சொல்ற பகீர் பொய் இது !

சைக்காலஜிஸ்ட் பெல்லா டி பாலோ பொய் பற்றி சொல்ற தகவல்கள் ஆச்சரியப்படுத்துது. நேரடியா பொய் சொன்னா பல வேளைகள்ல மாட்டிப்பாங்க. அதனால பொய் பார்ட்டிங்க போன்ல தான் அதிகம் பொய் சொல்றாங்களாம். உலகத்துல சொல்லப்படற பொய்கள்ல 60 சதவீதம் பொய்களை துரோகம் பட்டியல்ல சேக்கலாமாம். 70 சதவீதம் பொய்யர்கள் சொன்ன பொய்யை திரும்பத் திரும்ப சொல்றாங்களாம். ஏழு பொய்ல ஒரு பொய் கண்டுபிடிக்கப் படுமாம் ! இப்படியெல்லாம் தன்னோட ஆய்வு முடிவுகளை சைக்காலஜி டுடே மேகசின்ல டாக்டர் பெல்லா டி பாலோ எழுதியிருக்காங்க.

பொய் பேசறவங்கள்ல 4 சதவீதம் பேர் புரபஷனல் பொய்யர்களாம். இவங்களோட பொய்யைக் கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டம் மத்தவங்களோட பொய்யை ஈசியா கண்டு பிடிக்கலாமாம். அதெப்படி ?

பேசும்போ சாதாரணமா பேசறாரா ? இல்லே வித்தியாசமான வார்த்தையெல்லாம் யூஸ் பண்றாரா பாக்கணும். முரணா பேசறாரான்னு கவனிக்கணும்.

பேசறவங்க கிட்டே அவங்க எதிர்பார்க்காத ஒரு கேள்வியை சட்டுன்னு கேளுங்க. அதுலயே பொய்யர்களை நிலை குலைய வெச்சுடும்.

ரொம்ப சைலண்ட் பார்ட்டி ஒரு நாள் கலகலப்பா இருந்தாலோ, கலகலப்புப் பார்ட்டி ரொம்ப சைலண்டா இருந்தாலோ சம்திங் ராங். ஜோக் அடிச்சா கொஞ்சம் டியூப் லைட் மாதிரி சிரிக்கிறாரா ? ஜோக்கே சொல்லாம கூட விழுந்து விழுந்து சிரிக்கிறாரா ? பேசறதுல கொஞ்சம் செயற்கைத் தனம் இருக்கா உஷாராயிடுங்க. பொய்யா இருக்கலாம்.

“நான் நினைக்கிறேன், அப்படித் தான் இருக்கும், நான் நம்பறேன்… “ இப்படியெல்லாம் பேச்சில அடிக்கடி வந்தா கொஞ்சம் சந்தேக கேஸ் தான். அதே போல பாடி லேங்க்வேஜ் கவனிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இல்லேன்னு சொல்லி ஆமான்னு தலையாட்டுவாங்க…

பொய் பார்ட்டிங்க தேவையில்லாம ரொம்ப விளக்கம் குடுப்பாங்க. “ஏங்க லேட்” ன்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டா கூட அஞ்சு நிமிஷம் ஏதாச்சும் விளக்கம் குடுத்துட்டே இருப்பாங்க.

நிறைய பேரு நினைக்கிறாங்க பொய் பேசறவங்க கண்ணைப் பாத்து பேசமாட்டாங்க, முகத்தை திருப்பிக்குவாங்கன்னு. பட், உண்மைல பொய் பேசறவங்க கண்ணை நேருக்கு நேரா பாத்து பேசுவாங்க. அவங்க சொன்னதுக்கு நீங்க எப்படி ரியாக்ஷன் கொடுக்கறீங்கன்னு பாப்பாங்க. சோ, கொஞ்சம் அந்த ஏரியாவிலயும் கவனம் செலுத்தணும். இப்படி கொஞ்சம் கவனமா இருந்தா பொய் பேசறதைக் கண்டு பிடிக்கலாம்.

சுவாரஸ்யமான பொய்கள் அழகு தான். கவிதைக்குப் பொய் அழகுன்னு சொல்றதைப் போல. இலக்கியத்துல வர தற்குறிப்பேற்ற அணியே ஒரு வகையில் பொய் பேசற சமாச்சாரம் தானே ! ஆனா அது இன்னொரு நபரைப் பாதிக்கற அளவுக்கு இருந்தா பொய் பேசறது ரொம்பவே தப்பாயிடும். “பொய்மையும் வாய்மையிடத்து” ங்கறதை தப்பா புரிஞ்சுக்காம இருந்தா சரி !

நன்றி : பெண்ணே நீ !

Saturday, July 3, 2010

காதல் கவிதைகள்..!!!











கவிதைகள்..!!









காதல் கவசம்


நினைத்தாலே கொஞ்சிடவோர் நெஞ்சமோர்
வஞ்சி நுழைந்தாலே காதல் மலர்ந்து மகிழ்ந்தாடும்
நித்திரை கலைந்தோடும் இரவு பகல் நெஞ்சம்
தொட்டு கவர்ந்தவளின்

இதயம் குடியேற கடிதம் வரைந்து
வருகை தர கெஞ்சும் விழி

சூரியன் எழுந்து வரும் திசை கிழக்கு
நீ வரும் திசை தான் என்றுமென் கிழக்கு
முகத்திரையை மெல்ல நீ விலக்கு - இல்லை
தொடரும் உன் மீது என் விழி வழக்கு

கைகள் தொடும் தூரம் இதயம் இருக்கு
விரல் தொட்டு பார்த்திட விரதம் இருக்கு
வழிவிட்டால் தானே தொடுவது மானே
தொடத் தொட புதுவித சுகமும் பிறக்கும்

எட்டாத் தூரத்தில் நிலவது இருக்கு
நினைத்தால் உள்ளங்கையது இருக்கும்
நீ அந்த நிலவாய் வருக வருக
நேர்முக வர்ணனை பெறுக பெறுக

அந்தியில் சந்திரன் நகலே வருக
சுந்தரன் இந்திரன் மகளே வருக
ஆயிரம் தாமரை முகமே வருக
பூமரம் சாமரம் வீசிறிட வருக வருக

உயிரின் உயிரே எனதுயிர் நீயே
உயிரே உயிரே எனதாருயிரே
உனதுயிர் எனதுயிர் வேறானதா
இனி நமதுயிர் என்றும் இரண்டல்ல ஒன்றே (2)

உனதுயிர் எனதுயிர் ஓருயிர் உயிரே
இணைய இணைய வாழும் உயிரே
உயிரும் உயிரும் உரசிடும் பொழுது
மறுமுறை பிறந்த உணர்விங்கு வருது
காகிதம் இன்றி தந்திகள் அனுப்ப
கண்களும் இதயமும் காத்துக் கிடக்கு
அடிக்கடி காதலி தந்தியும் அடிக்க
விரிந்தன இமைகள் விரித்ததைப் படிக்க
எண்ணம் முழுதும் எழுதி வைத்தேனே
அதில் என்னை முழுவதும் கொடுத்துவிட்டேனே
இதயம் ஒன்றையும் அனுப்பி வைத்தேனே
அது இருக்கும் இடம்தனில் சேர்த்து விட்டேனே

காதல் சின்னம் தாஜ்மஹாலே
கண்களில் மின்னுது காதல் மஹாலே
வெண்மை நிறங்கொண்ட தாஜ்மஹாலே
உண்மைக் காதலை உணர்த்தும் மஹாலே (2)

காதலர் கூடிடும் காதல் மஹாலே
காதலை எழுதிடும் கவிதை மஹாலே
காதலைப் பளிச்சிடும் பளிங்கு மஹாலே
காதலைப் புனிதம் என்ற மஹாலே
காதலர் வணங்கும் வண்ண மஹாலே
காதலர் ‌ நெஞ்சினைக் கிள்ளும் மஹாலே
ஆயிரம் ஆண்டினைக் கடந்த மஹாலே
அதிசயம் ஏழினில் இணைந்த மஹாலே
காதல் பாடம் சொல்லும் மஹாலே
காலம் காலமாய் வாழும் மஹாலே
காதலைத் தூய்மைப் படுத்தும் மஹாலே
கல்நெஞ்சம் எதையும் கரைக்கும் மஹாலே
தலைமுறை தாண்டி வாழும் மஹாலே
தாய்த்திருநாட்டின் தலைமை மஹாலே
நாளைய தேசம் மதிக்கும் மஹாலே
நம்மிடம் நேசம் வளர்க்கும் மஹாலே
யுகங்கள் கடந்தும் வாழும் மஹாலே
ஜனங்கள் புகழ்ந்து போற்றும் மஹாலே
வேண்டாம் இன்னொரு தாஜ்மஹாலே
நீயிருந்தால் என் இதயமஹாலே


கலியுகம் இதுவா காதலர் யுகமா
ஐயம் இருக்கு அவனியில் சமமா
கம்பியூட்டர் யுக நீதிபதியுமே
காதல் யுகமென கணித்தது சரியாய் (2)

முகப்பருவை கிள்ளி எறிவதைப் போலே
முதல் கடிதம் அதைக் கிழித்து விட்டாயே
முதல் வரியை நீ படித்திருந்தால் என்
முகவரியைத் தேடி அலைந்திருப்பாயே
முகப்பரு மீண்டும் முளைத்திங்கு வருமே
அது போல் கடிதம் தொடர்ந்தே வருமே
அடிக்கடி அது உன் எல்லைக்கு வருமே
அனுதினம் அன்புத் தொல்லையும் தருமே
கடிதங்கள் இது வெறும் கடிதங்கள் அல்ல
ஏவுகணைக் காதல் ஏவுகணை உன்
இதயம் வரை வரும் இயன்றவரை சிறை
எடுத்து வரும் உன் இதயம் அதனை

கம்பனும் உன்னை கண்டதும் கண்டதும்
காவியம் இரண்டெனத் தந்திருப்பான்
கண்ணதாசனும் கண்டதும் உன்னைக்
கவிதைச் சிறையில் அடைத்திருப்பான் (2)

இருவரில் ஒருவரும் இன்றிங்கு இல்லை
இருந்தால் போட்டிகள் வருவது உண்மை
அவர்களுக்கில்லா பெருமை எனக்கு நீ
வாழும் காலம் நான் வாழ்வதில் இருக்கு
இதுவே எனக்கு போதும் உனை நான்
அடைந்திட நடத்துவேன் யாகம் யாகம்
மனமதில் இடத்தைக் கொடுத்து கொடுத்து
மரணத்தை ஒருமுறை தடுத்து நிறுத்து
இதயம் இரும்பா சொல்லிடு சொல்லு
உருகும் மெழுகா உண்மையை சொல்லு
இரும்பாய் இருந்தால் உருக வைப்பேனே
மெழுகாய் இருந்தால் உயிரை வைப்பேனே
அவர்களுக்கில்லா பெருமை எனக்கு நீ
வாழும் காலம் நான் வாழ்வதில் இருக்கு
இதுவே எனக்கு போதும் உனை நான்
அடைந்திட நடத்துவேன் யாகம் யாகம்
மனமதில் இடத்தைக் கொடுத்து கொடுத்து
மரணத்தை ஒருமுறை தடுத்து நிறுத்து
இதயம் இரும்பா சொல்லிடு சொல்லு
உருகும் மெழுகா உண்மையை சொல்லு
இரும்பாய் இருந்தால் உருக வைப்பேனே
மெழுகாய் இருந்தால் உயிரை வைப்பேனே

அழகே அழகின் மறுபதிப்பே நீ
ஆண்டவன் அளித்த அன்பளிப்பே உனை
அடைந்தால் தானே மதிப்பே எனக்கு
அடையாவிடில் இந்த பிறப்பே எதற்கு
ஊர்வசி மேனகை ரம்பை எவரும்
உயிரோடில்லை பரவாயில்லை
மூவரின் நகலை மகளாய்த் தந்த
உன் தாயிடம் சொல்வேன் நன்றி என் நன்றி
பார்த்ததும் கண்கள் படையெடுத்தே வரும்
பாதையில் நடக்கும் படப்பிடிப்பே தினம்
கண்ணொளி பாயும் மின்னொளி போலே
விண்வெளி யாவும் உன் மொழி தானே
சிரித்தால் நீயொரு வெண்தாமரைப் பூ
முறைத்தால் கூட நீ செந்தாமரைப் பூ
சிந்தும் வார்த்தைகள் இனிக்கும் கரும்பு
சிரிப்பொலி கேட்டதும் விண்வெளி திரும்பும்

பூவின் பூவே புன்னகைப் பூவே
பூவே பூவே மல்லிகைப் பூவே
வந்திடு வந்திடு வாசனை வீசி
நெஞ்சினில் காதல் சந்தனம் பூசி
என்னிடம் இருப்பது இதயம் ஒன்றே
உன்னிடம் கொடுக்க முயன்றேன் அன்றே
கல்லூரிக் கதவு திறந்திடும் முன்பே
கண்களும் கால்களும் நுழைந்திடும் அங்கே
இரவினில் பகலினில் இனியவள் முகமே
விழிகளில் நுழைந்திட புதுப்புது சுகமே
விடியும் வரையில் கனவுகள் சுகமே
விடிந்தால் மலரும் நினைவுகள் சுகமே
நினைவலை கனவலை தொடரும் நெஞ்சில்
என் நிலை உனக்கது புரியலை ஏனோ
என் நிலை உன் நிலை ஓர் நிலை தானோ

மேகத்தைச் சுருக்கி கூந்தலில் அடைத்தாய்
மின்னலை வளைத்து புருவும் வரைந்தாய்
நிலவினைப் பிடித்து முகமதில் பதித்தாய்
மதுமலர் இதழ் பதித்திதழ்களில் பதித்தாய்
மௌனத்தைப் பேசும் மொழியெனக் கொண்டாய்
எனக்கது புரியும் வழியொன்றும் சொன்னாய்
தென்றலை நடையில் கொண்டு வந்தாய்
தென்னங்கீற்றினில் சடை நீ பின்னி வந்தாயே
அலைகளை அடுக்கி நெளிமுடி தொடுத்தாய்
எழுதும் கவிதை வரிகளில் தொடர்ந்தாய்
மேகத்துக்கொரு நாள் தாகம் எடுக்கும்
தாகம் எடுத்ததும் கடல்நீர் குடிக்கும்
உனக்கும் ஒரு நாள் காதல் பிறக்கும்
உடனே உன் மனம் என்னை நினைக்கும்
காதலுக்கு அன்று சுதந்திர திருநாள்
கனவுக்கு அன்றே விடுமுறை வரும் நாள்
புத்தகப் புழுவாய் இருந்தேன் முன்னால்
புத்தகம் திறக்க மறந்தேன் உன்னால்
இதயம் பிடிப்பது குறிக்கோள் என்றே
இரவில் படிப்பதை நிறுத்தினேன் கண்ணே

போர்க்குணம் மாறணும் அன்பே அன்பே
புகழ்ந்து உனைப் பாடணும் அன்பே அன்பே
கனிமொழி வரும் வழி தினம் தினமே நான்
காத்திருந்தேன் மனம் கனிந்திடுவாய்
குளு குளு நதியில் நீ தெரிவாய் நான்
குளித்திடும் நீரில் நீ வருவாய்
குறுநகை சிந்திடும் நாள் தான் எதுவோ
குறிப்பினில் உணர்த்தும் நாள் தான் எதுவோ
அன்பே எழுவாய் எழுந்து நீ வருவாய்
காலையும் மாலையும் நிழலென வருவேன்
நாணத்தில் யன்னல் கதவினைச் சாத்து
நான் வர I LOVE NOW YOU சொல்லு
மார்கழி பனித்துளி போல் சிரித்தே
அதிகாலையில் வாசலில் நீர் தெளித்தாயே
நீ இடும் கோலத்தில் மாவெனவே நான்
மறைந்து வந்தேன் காதல் மாணவனாக

அறிவியல் பாடம் படித்தவள் காதல்
ஆக்ஸிஜன் கொடுத்து உயிர் காத்திடுவாயே
புவியியல் பாடமும் படித்தவள் காதல்
விதை அள்ளி நெஞ்சில் விதைத்திடுவாயே
சரித்திரம் முழுதும் தெரிந்தவள் காதல்
சரித்திரம் எழுதிட சம்மதம் அளிப்பாய்
வேதியல் பாடமும் படித்தவள் காதல்
அணுக்களை குருதியில் கரைத்திடுவாயே
கணக்கினை கரைத்து குடித்தவள் நீயே
காதலை காதலில் பெருக்கிடு உடனே
தாய்மொழி ‌ தமிழ்மொ‌ழி ஆங்கிலம் பொதுமொழி
இருமொழி எடுத்தும் காதலை முன்மொழி
இத்தனை பாடம் படித்திருந்தாலும்
இருக்குது இன்னொரு முக்கிய பாடம்
எத்தனை பாடம் படித்திருந்தாலும்
பருவத்தில் படிக்கணும் காதல் பாடம்

ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு
காதலை அறிந்தே காதலை செய்வோம்
அம்பிகாபதி அமராவதி காதலை
அறிவோம் அறிந்தே காதலை வெல்வோம்
உயிரைக் கொடுத்து காதலை வளர்ப்போம்
இவர்கள் யாவரும் சீனியர் நமக்கு
வெற்றியை நழுவிய காதலர் சிந்திய
கண்ணீர் துளிகள் அதுதான் கடலோ
காதலர் சிந்திய கண்ணீர் துளியால்
கடல்நீர் உப்பாய் மாறியதன்றே
கடலில் அலைகள் ஓய்வது இல்லை
காதலும் அதுபோல் இதுவே உண்மை
வாழ்வினை தியாகம் செய்தவர் வாழும்
சோதனைக் கூடமே கல்லறையாவும்
அவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தி
காதலை மதிப்போம் கண்ணீர் வடித்து
காதலும் ஒரு வகை தெய்வீகம் இதை
காத்திட முழங்குது என் கீதம்
பாடணும் பாடணும் காதலர் யாவரும்
காதலர் கீதையாய் காதலர் தினமே

இலைமேல் விழும் பனித்துளி போல் நெஞ்சில்
எழுவது உண்மைக் காதல் இல்லை
சிப்பியில் விழும் மழைத்துளி போல் நெஞ்சில்
வருவதை உண்மைக் காதல் என்பேனே
ஒருதலைக் காதல் என்று சொல்லி ஓர்
உயிரைப் பறிப்பது நியாயமே இல்லை
ஒருதலைக் காதல் என்றெண்ணி உயிரை
விடுபவர் யாவரும் கோழைகள் உண்மை
ஒருதலைக் காதல் என்பதனால் உயிர்
தியாகம் செய்வதில் அர்த்தமே இல்லை
உயிரைத் தியாகம் செய்வதனால் நம்
உயிருடன் காதல் வருவதும் இல்லை
காதலின் முடிவு மரணமென்றால் அதை
மாற்றிக் காட்டிட சபதமெடுப்போம்
முதலில் மறுக்கும் பெண்ணிதயம் அது
முடிவில் இருக்கும் ஆணின் இதயம்

மான்களும் மீன்களும் துள்ளுது அங்கே
காரணம் காதல் வென்றது இங்கே
அருவியும் குருவியும் ஆடுது சடுகுடு
காதலைக் காதல் வென்றதே என்றே
காதல் இல்லாதொரு ஜீவனும் இல்லை
இருந்தால் அது ஜீவனே இல்லை
காதல் இல்லாதொரு தேசம் இல்லை
இருந்தால் அது நம் தேசம் இல்லை
காதலை மனிதா வணங்கு வணங்கு
கடவுளைப் ‌போலவே நினைத்து நினைத்து
மதங்களும் ஜாதியும் காதலை எதிர்த்தால்
வேண்டாம் மரமென வெட்டியே சாய்ப்போம்
காதல் காதல் காதல் எந்நாளும்
வாழும் வாழும் மூச்சு நின்றாலும்
வாழும் தேசமே காதலர் தேசம்
காதலர் கீதமே தேசிய கீதம்
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய காதல்
ஜெயஜெய ஜெயஜெய காதல் ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய காதல் ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய காதலே ஜெயஜெய
பறக்கும் பறவை அதை நீ கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
நிலவினை மலரினை அழைத்தே கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
ஓடும் நதியினை நிறுத்தி நீ கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
கருவில் வளரும் சிசுவையும் கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
பருவம் அடைந்த பெண்களைக் கேளு
உன் காதலி அவளின் கருத்தையும் கேளு
புனிதம் புனிதம் காதல் புனிதம்
புனிதம் புனிதம் காதலே புனிதம்.

-நன்றி-

Thursday, July 1, 2010

காதல் கடிதங்கள்...!!!


கனவே கனவே
என் கனவெல்லாம் நீயே...

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்...

நீ நடக்கும் வீதியில்
தூசியே இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை
நான் கடந்து போவதால்...

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை
நான்
தொடருந்து வருவதால்...

நீ தூக்கி ஏறியும்
குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ
அது குடி புகுவதால்...

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில்
என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும்
தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்

என்னைத் துண்டு
துண்டாக்கிவிட்டு நீயோ
தூரமாய் போகிறாய்...

தூக்கத்தைத் தொலைத்து நான்
திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத
என் காதல் கடிதங்கள் மட்டும்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையில்...!!!