Sunday, June 13, 2010

என்னவளே..!!!

இன்றுவரை என் இதயத்தின்
ஆழத்தை உனக்குக் காட்டியதில்லை.
உன்னைப் பற்றிய என் கனவுகளை
உனக்கு நான்கூறியதும் இல்லை
ஆனாலும்
உனக்குத் தெரியும்.
நான் உன் நிழலைக் கூட
காதலிக்கிறேன் என்று .

-------------------

உன்னுடைய நிராகரிப்புகளுக்குப்
பதிலாய் இன்னும் அதிகமாய்
காதலையே தருகிறேன்.
உனக்கு... நிராகரித்தல் பழக்கமாகி விட்டது.
எனக்கு... காதலித்தல் வழக்கமாகி விட்டது.

------------------------

உன்னுடன் பேசும் போதெல்லாம்
பார்க்க வேண்டும் எனத் தோன்றும்
ஆனால் பார்க்கும் போது பேசத் தோன்றுவதில்லை.

------------------------

என் பெயரை கேட்டாலே
உன் பெயரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாகத் தெரிகின்றது.

-------------------------

காதலிப்பதற்கு நீ இருக்கின்றாய்.
என்ற காரணமே போதுமாய் இருக்கின்றது இந்த மண்ணில் நான் சுவாசிப்பதற்கு...!!

-------------------------

நீ நடந்தால் உன்னுடனேயே நடக்கும்,
நீ சிரித்தால் உன்னுடனேயே சிரிக்கும்,
நீ அழுதால் உன்னுடனேயே அழும்,
உன் நிழல் போலவே,
உன்னில் நான் வைத்திருக்கும் காதலும்.

கவிதை உபயம் - கலைமதி திலகநாதன்

அம்சமானவளே..!

chellam2

அவ்வளவு
ஆசையா உனக்கு
என் மீது

கோவத்தில் நீ
சட்டி பானையோடு
சண்டைபிடித்தும்

இவ்வளவு ருசியா
சமைத்திருக்கிறாய்

*

அமாவாசை விரதத்தில் நீ
“கா கா கா” என கரைந்து
கொண்டு வெளியே வருகிறாய்

உன்னைக் கண்டதும்
காகங்கள் குழம்பிவிட்டது
பெளர்ணமி விரதமோ என்று

*

இந்த மழை உடனே
நின்றுவிடும் பார்
எப்படித் தெரியும்
நீதான் குடை
விரித்துவிட்டாயே

*

என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அதற்காகவாவது உன்னைக்
காதலிக்க வேண்டும்
எங்கே நீ…

*

என் கண்களுக்கு இமைக்க
மட்டும்தான் தெரியும் உன்
கண்களில் ஒன்றைக்கொடு
உன்னை மாதிரியே
உன்னை நான் இமைக்காது
பார்க்க வேண்டும்

காதலியுங்கள்...!!


நேசித்தால் காதல் வரும்...
வர்ணித்தால் கவிதை வரும்....
கவிதையை வாசியுங்கள்....
காதலியை நேசியுங்கள்...

கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....

கவிதை பிழையை திருத்தினால்
காதல்....
காதல் பிழையை திருத்தினால்
சாதல்.....

கவிதை காதலின் தாக்கமோ... !!

வருந்துவதை விட திருந்துவது
மேல் என்று எண்ணினேன்...
திருந்த முடியவில்லை
கவிதையினால் மட்டும்...

யோசித்தேன்...

அங்கு காதல் இல்லை
அதனால் கவிதையும் இல்லை..... !!
எப்படி திருந்துவது.. யோசித்தேன்...
"காதல் வயப்படுவதே மேலோ....."
என்று யூகித்தேன்.....

காதல் வசப்பட்டேன்....!!

இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!

இது போதுமடி எனக்கு....!!



அதிகாலையில்

உன் கொலுசு ஒலியின் சத்தம்..

உன் கண்ணில் விழிக்கும்

என் கண்கள்

இது போதுமடி எனக்கு....

குளத்தில்

குளிக்கும் பறவைகளின் மத்தியில்

முகம் துடைக்க

உன் முந்தானை...

இது போதுமடி எனக்கு....

########‍‍$$$$########‍

கடற்கரை மணலில்

என் பாதச்சுவட்டின் மேலே

உன் கால் வைத்து நடந்து வந்தாய்...

திடீரென நின்றதும்

கால் வலிக்கிறதா என்றேன்..

இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..

காதலுடன்...!!

18 வயசுல.....!!!

18


நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?

**********************

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !

**********************

உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

**********************

பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.

**********************

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?

**********************

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!

**********************

உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.

முக்கோணக்காதல்....!!

11


"என்னைக் கொஞ்சம்
மாற்றி" என்ற பாடலை பாடியவாறே கண்ணாடியின் முன் தன் முகபாவனைகளை சரி செய்து கொண்டிருந்தாள் கார்த்திகா.
இவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை
பார்த்து வியந்து போய் "எங்கடி கிளம்பிட்ட" என்றாள் ராணி.

"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து
பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டான்.. "

" நீ என்னடி சொன்ன?" என்றாள் ராணி..

"வரேன் என்று சொல்லிட்டேன்....

" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா?"

" ஆமாம்.. "

"அப்போ ராஜாவின் நிலைமை??"

"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு?" "ம்ம்ம்..நல்லாத்தான் இருக்கு.. "

கார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..

அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக்
எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும்
அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு
புன்னகை..

கார்த்திக் அருகில் சென்று "வந்து ரொம்ப நேரம் ஆச்சா..??

"இல்லை 15 நிமிடம் தான்.. "

கார்த்திக் "ஐ லவ்" என்று ஆரம்பிக்க, சர்வர் "என்ன மேடம் வேணும்? " என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..

"இரண்டு வெண்ணிலா.." என்று ஆர்டர் பண்ணிவிட்டு..

கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி
சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. " என்று தயங்கினான்..

"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க " என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..

கார்த்திக் மெல்ல தயங்கி, "நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று
ஆசைப்படுறேன்.. ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்" என்றான்..

இதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு "ம்ம் கண்டிப்பா சொல்றேன் " என்று கிளம்பினாள்..

என்னவளுக்காக...!!!

20


எனக்கு எது பிடிக்கும்,
எது பிடிக்காது,
என்று தெளிவாய் உன்னிடம்
சொல்லத்தெரிந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை...
"நான் உன்னை காதலிக்கிறேன்"
என்ற வார்த்தையை மட்டும்
சொல்லத் தெரியவில்லை...

நான் எழுதும் ஒவ்வொரு
கவிதையையும் படித்துவிட்டு,
ஒரு புன்சிரிப்புடன்,
இந்த கவிதைக்கு பின்னால்
"யாரோ ஒரு பெண் இருக்கிறாள்"
என்கிறாய்..அது நீ தான்
என்று உனக்கு தெரிந்தும் கூட..

தோழிகளோடு கலகலப்பாக
சிரித்துக்கொண்டு செல்கையில்,
என்னை பார்த்ததும்
ஏன் அமைதி கொள்கிறாய்..
அதை பார்த்தபின் தெரிந்துகொண்டேனடி
"நீயும் என்னைக்காதலிக்கிறாய்" என்பதை...!!!

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!

எது காதல் தெரியவில்லை....!!

Angel  Graphic #84





என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா...

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டு கொண்டால் - என்
மனம் வதைபடுகிறதே
அதுதான் காதலா...

அருகில் நீ
இல்லாத போதும்
உன்னுடன்
உறவாடி உரையாடி
மகிழ்கிறேனே
இதுதான் காதலா...

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாச காற்று உள்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா...

யார் கேட்டும்
இல்லை என்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்க தோன்றுமே
அதுதான் காதலா...

பிரிவுகள் நேரும்போது
ஏதோ ஓர் உணர்வு - நம்
விழிகளுக்குள் நீர் நிரப்பி
செல்கிறதே
அதுதான் காதலா...

ஊரே நம் உறவை
காதலென்ற போது
நீ மட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களேன்று'...

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்