Sunday, June 13, 2010

அம்சமானவளே..!

chellam2

அவ்வளவு
ஆசையா உனக்கு
என் மீது

கோவத்தில் நீ
சட்டி பானையோடு
சண்டைபிடித்தும்

இவ்வளவு ருசியா
சமைத்திருக்கிறாய்

*

அமாவாசை விரதத்தில் நீ
“கா கா கா” என கரைந்து
கொண்டு வெளியே வருகிறாய்

உன்னைக் கண்டதும்
காகங்கள் குழம்பிவிட்டது
பெளர்ணமி விரதமோ என்று

*

இந்த மழை உடனே
நின்றுவிடும் பார்
எப்படித் தெரியும்
நீதான் குடை
விரித்துவிட்டாயே

*

என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அதற்காகவாவது உன்னைக்
காதலிக்க வேண்டும்
எங்கே நீ…

*

என் கண்களுக்கு இமைக்க
மட்டும்தான் தெரியும் உன்
கண்களில் ஒன்றைக்கொடு
உன்னை மாதிரியே
உன்னை நான் இமைக்காது
பார்க்க வேண்டும்

No comments: