Sunday, June 13, 2010

இது போதுமடி எனக்கு....!!



அதிகாலையில்

உன் கொலுசு ஒலியின் சத்தம்..

உன் கண்ணில் விழிக்கும்

என் கண்கள்

இது போதுமடி எனக்கு....

குளத்தில்

குளிக்கும் பறவைகளின் மத்தியில்

முகம் துடைக்க

உன் முந்தானை...

இது போதுமடி எனக்கு....

########‍‍$$$$########‍

கடற்கரை மணலில்

என் பாதச்சுவட்டின் மேலே

உன் கால் வைத்து நடந்து வந்தாய்...

திடீரென நின்றதும்

கால் வலிக்கிறதா என்றேன்..

இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..

காதலுடன்...!!

No comments: