
அதிகாலையில்
உன் கொலுசு ஒலியின் சத்தம்..
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இது போதுமடி எனக்கு....
குளத்தில்
குளிக்கும் பறவைகளின் மத்தியில்
முகம் துடைக்க
உன் முந்தானை...
இது போதுமடி எனக்கு....
########$$$$########
கடற்கரை மணலில்
என் பாதச்சுவட்டின் மேலே
உன் கால் வைத்து நடந்து வந்தாய்...
திடீரென நின்றதும்
கால் வலிக்கிறதா என்றேன்..
இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..
காதலுடன்...!!
No comments:
Post a Comment