
நேசித்தால் காதல் வரும்...
வர்ணித்தால் கவிதை வரும்....
கவிதையை வாசியுங்கள்....
காதலியை நேசியுங்கள்...
கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....
கவிதை பிழையை திருத்தினால்
காதல்....
காதல் பிழையை திருத்தினால்
சாதல்.....
கவிதை காதலின் தாக்கமோ... !!
வருந்துவதை விட திருந்துவது
மேல் என்று எண்ணினேன்...
திருந்த முடியவில்லை
கவிதையினால் மட்டும்...
யோசித்தேன்...
அங்கு காதல் இல்லை
அதனால் கவிதையும் இல்லை..... !!
எப்படி திருந்துவது.. யோசித்தேன்...
"காதல் வயப்படுவதே மேலோ....."
என்று யூகித்தேன்.....
காதல் வசப்பட்டேன்....!!
இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!
No comments:
Post a Comment