Tuesday, July 13, 2010

முகம் தெரியா தோழிகள் .........!!!

முகம் தெரியாத முல்லைகள்..
முகவரி இல்லா நட்புடன்...

கண்கள் சந்ததில்லை என்றாலும்
இதயங்கள் இதமாய் பேசியதுண்டு.....

எழுதுகோலில் தொடங்கிய நம் நட்பின்
ஆழத்திற்கு அளவுகோல் இல்லை......

அன்பால் அரவணைக்கும் உள்ளங்கள்..
கண்ணீர் துயர் துடைக்கும் கைகள்.....
தன்னம்பிக்கை தரும் தாரகைகள்....
துன்பங்களை இறக்கி வைக்க சுமைதாங்கிகள்...
எல்லாம் இங்கு உண்டு...

எழுத்துகளில் ஆரம்பித்து இதயத்தில்..
சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும்..
இந்த நட்பிற்கு...
இணையேதும்மில்லை......

No comments: