Saturday, June 26, 2010

நான் காதல் மயக்கத்திலா...?

அதீத‌மாய் நானுன்னை
நேசித்த‌தும் நிஜ‌ம்
அதை நிஜ‌மென‌ நீ
ந‌ம்ப‌ ம‌றுத்த‌தும் நிஜ‌ம்.

---------------------

இல‌க்கில்லாம‌ல்,
திசைய‌றியாம‌ல்
வெறுமையாய் தொட‌ர்கிற‌து
என் ப‌ய‌ணம்
உன் நினைவுகளைச்...
சுமந்தபடி.

-----------------------

வில‌கியிருப்ப‌துதான்
உன் விருப்ப‌மென்றால்,
வில‌க‌லுக்கான கார‌ண‌த்தையாவ‌து
சொல்லிவிடு,
விருப்பமாய் நீ வாழவே,
விடைபெறுகிறேன்
நான் இந்த உலகை விட்டு.

------------------------

நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?

-----------------------

சந்தோஷமானாலும் சரி
துக்கமானாலும் சரி
காதலின் உணர்வு காற்றில்
இலவம் பஞ்சு பறப்பதுபோல,
மென்மையான….
தள்ளாட்டமான
ஒரு மயக்கம்தானே...!!!!

----------------------

என் கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.


கவிதை உபயம் - கலைமதி திலகநாதன் -



No comments: